எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் 05 நாட்களும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, பாடசாலைகளுக்கு வௌியேயும் பாடசாலைகளுக்குள்ளேயும் நடத்தப்படும் நிகழ்வுகளை வரையறுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.