யூரியாவை 15,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

சோளம், உருளைக்கிழங்கு, தேயிலை செய்கைக்கான யூரியாவை 15,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

by Bella Dalima 10-08-2022 | 5:07 PM

Colombo (News 1st) சோளம், உருளைக்கிழங்கு மற்றும் தேயிலைக்கு வழங்கப்படும் 50 கிலோகிராம் யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் வழங்கிய யூரியா பசளையில் 30,000 மெட்ரிக் தொன் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் கூடுதலான அளவு (சுமார் 10,000 Mt) வட மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கையிருப்பில் பசளை இருப்பதால், அதனை பெரும்போக செய்கைக்கு வழங்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர்  குறிப்பிட்டார்.