StAR திட்டத்தை ஆரம்பிக்குமாறு HRW கோரிக்கை

StAR திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கோரிக்கை

by Bella Dalima 09-08-2022 | 10:27 PM

Colombo (News 1st) திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery - StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை தேடுவதற்கான சர்வதேச முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் கூட்டுடன் இலங்கை இணைய வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவ்வாறு செயற்படுவதற்கு முன்நிற்க வேண்டுமென நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆறு யோசனைகளை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தமது நிர்வாகம் செயற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.