மாதாந்தம் 5 ஆம் திகதி எரிவாயு விலை திருத்தம்

மாதாந்தம் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்த அமைச்சரவை அனுமதி

by Bella Dalima 09-08-2022 | 5:44 PM

Colombo (News 1st) தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கும் நோக்கில், விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாதாந்தம் 05 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, ஜப்பான் மொழி கற்கையை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிக்கற்கை உள்ளிட்ட பாடங்களை இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.