.webp)
நாளை முதல் ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் எதிர்வரும் 10 ஆம் திகதியும் ஒரு மணித்தியாலத்திற்கு மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையான காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
M,N,O,X,Y,Z தவிர்ந்த ஏனைய வலயங்களில் மாத்திரம் குறித்த அறிவிப்புக்கு அமைவாக ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.