கடலில் மிதந்துகொண்டிருந்த ஆணின் சடலம் மீட்பு

திக்கோவிட்ட துறைமுகம் அருகில் கடலில் மிதந்துகொண்டிருந்த ஆணின் சடலம் மீட்பு

by Bella Dalima 06-08-2022 | 4:45 PM

வத்தளை: திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில்,   உரப்பைக்குள் சடலம் இடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.