.webp)
Colombo (News 1st) கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட 17 வயதான யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்று மீண்டும் திரும்பிய போது, பலத்த மழையினால் ஏற்பட்ட வௌ்ளத்தில் குறித்த யுவதி அடித்துச் செல்லப்பட்டார்.
பிரதேச மக்களும் பொலிஸாரும் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் யுவதியின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன