இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Bella Dalima 03-08-2022 | 8:31 PM

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.