.webp)
Colombo (News 1st) தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலை - மிளகுசேனை பகுதியை சேர்ந்த 19 வயதான, உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இன்று (22) பகல் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.