கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 59 வயதானவர் மரணம் 

கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 59 வயதானவர் மரணம் 

எழுத்தாளர் Bella Dalima

22 Jul, 2022 | 3:52 pm

Colombo (News 1st) திருகோணமலை – கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 59 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவரே  இன்று (22) முற்பகல் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்