எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட 14 பேருக்கு தடை

பாராளுமன்ற நுழைவாயில் வரையான வீதிகளில் எதிர்ப்பில் ஈடுபட 14 பேருக்கு தடை உத்தரவு 

by Staff Writer 19-07-2022 | 4:36 PM
Colombo (News 1st) பொல்தூவ சந்தியிலிருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையுள்ள வீதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 14 பேருக்கு எதிராக தடை பிறப்பித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் எதிர்ப்பில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என தெரிவித்து வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு அமைய, நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.