காணாமற்போயிருந்த மீனவரின் சடலம் மீட்பு

தலைமன்னாரிலிருந்து தொழிலுக்கு சென்று காணாமற்போயிருந்த மீனவரின் சடலம் மீட்பு

by Staff Writer 19-07-2022 | 8:04 AM
Colombo (News 1st) தலைமன்னார் பியர் இறங்குதுறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலைமன்னார் பியர் இறங்குதுறையில் இருந்து கடந்த 14ஆம் திகதி மூவர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. 16ஆம் திகதி பிற்பகல் இந்திய இழுவைப் படகின் உதவியுடன் 02 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் மற்றுமொருவர் காணாமற்போயிருந்தார். இவ்வாறு காணாமற்போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டு தலைமன்னார் மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்டது. 51 வயதான தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.