யாருக்கு வாக்களிப்பதென ஜூலை 19 தீர்மானிக்கப்படும் 

யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் ஜூலை 19 தீர்மானிக்கப்படும்: கூட்டமைப்பு தெரிவிப்பு

by Bella Dalima 16-07-2022 | 8:37 PM
Colombo (News 1st) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.