by Staff Writer 14-07-2022 | 1:46 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று(14) நண்பகல் 12 மணி முதல் நாளை(15) அதிகாலை 05 மணி வரை கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.