லயன் குடியிருப்பில் தீ; 4 வீடுகள் சேதம்

லயன் குடியிருப்பில் தீ; 4 வீடுகள் சேதம்

by Staff Writer 14-07-2022 | 12:58 PM
Colombo (News 1st) பதுளை - லுணுகலை, சுவிண்டன் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் நேற்று(13) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று(13) மாலை 6.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 வீடுகளிலுள்ள தளபாடங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், மற்றுமொரு வீட்டின் கூரை சேதமடைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை. விளக்கின் மூலம் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்