சிங்கப்பூர் புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டார்

by Bella Dalima 14-07-2022 | 2:48 PM
Colombo (News 1st) இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றதாக CNN செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூர் ஊடாக சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை நோக்கி பயணிப்பதாக மாலைத்தீவுகளின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.