கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நாளை (15) நடத்துமாறு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை

by Bella Dalima 14-07-2022 | 5:09 PM
Colombo (News 1st) கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை நாளை (15) நடத்துமாறு எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று முற்பகல் கூடி கலந்துரையாடியதாக அவர் கூறினார். தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு பெயரை பரிந்துரைக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்தல் விடுத்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நடத்தி தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்