இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை - சபாநாயகர்

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை - சபாநாயகர்

by Staff Writer 14-07-2022 | 7:00 AM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவிற்கு(13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.