வீடொன்றிலிருந்து 38.36 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றல்

by Staff Writer 12-07-2022 | 10:49 AM
Colombo (News 1st) எம்பிலிப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 38.36 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் 46 வயதான பெண்ணொருவர் மற்றும் 22 வயதான மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.