தமிழகத்தில் தஞ்சமடைந்த வவுனியாவை சேர்ந்த 6 பேர்

by Staff Writer 12-07-2022 | 12:50 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர். இந்திய கரையோர பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 4 மாத காலத்திற்குள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்