ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2022 | 10:28 am

Colombo (News 1st) மன்னார் – இலுப்பைக்கடவை பகுதியில் 203 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

முழங்காவில் கடற்படை முகாமின் அதிகாரிகளால் நேற்று(11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் வெல்லன்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று(12) மன்னார் நீதவான் நீமிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்