by Staff Writer 11-07-2022 | 3:08 PM
Colombo (News 1st) மன்னார் பிரதேசத்தில் சுமார் 03 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் - சாவற்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரொன்றுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்துவைத்து பயணிக்கும் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 04 கிலோ 329 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.