Colombo (News 1st) ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் உயிரிழப்பை நினைவுகூர்ந்து நாளைய தினம்(12) நாட்டின் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அரச விடுமுறை தினம் அல்ல என பொதுசேவை நிர்வாகஅமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 08ஆம் திகதி நாரா நகரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.