பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்தமை தொடர்பில் மூவர் கைது

by Bella Dalima 10-07-2022 | 2:55 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.