எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது

எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது

by Bella Dalima 10-07-2022 | 4:05 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் எரிவாயு விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ள போதிலும், மக்களின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 50 ரூபாவால் மாத்திரமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டார்.