by Bella Dalima 09-07-2022 | 3:52 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை உடனடியாக பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான பிரதமரின் கீழ், குறிப்பிட்ட காலத்திற்குள் இணைந்து பணியாற்ற உடன்படும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நம்புவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.