கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

by Bella Dalima 09-07-2022 | 2:52 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள், தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு செத்தம் வீதியில் உள்ள ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாகவும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.