English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 Jul, 2022 | 6:17 pm
Colombo (News 1st) ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் ஆணைக்கு அடிபணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக மக்களை அடக்குமுறையில் ஆழ்த்திய அரசாங்கம், தவறுகளை திருத்தி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய தீர்மானத்தை உடனடியாக எடுக்காததால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகமும் ஜனாதிபதி மாளிகையும் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என்பதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அப்பதவியை வகிக்க மக்களின் ஆணை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சர்வகட்சி அரசாங்கம் உடனடியாக ஸ்தாபிக்கப்படுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைபாடு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதுடன், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்து பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
16 Jul, 2022 | 03:58 PM
08 Jun, 2022 | 03:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS