by Bella Dalima 08-07-2022 | 10:14 AM
Colombo (News 1st) காலி - மாகால்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஹபராதுவ - யட்டகல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 7 மணியளவில் எரிபொருள் வரிசைக்கு வந்த ஒருவர், தமது நண்பரின் கடைக்கு முன்பாக வரிசைக்குள் தனது காருடன் நுழைந்துள்ளார்.
அந்நபர் வாகனத்தை எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைக்குள் நிறுத்த முற்பட்ட போது, வரிசையின் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் மோதலில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.