English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
08 Jul, 2022 | 7:15 pm
Colombo (News 1st) திருகோணமலை – சீனக்குடா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
சீனக்குடா – தின்னம்பிள்ளை சேனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பையொன்றில் சுற்றிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிசுவை பிரசவித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவன் வௌிநாடு சென்றுள்ள நிலையில், குறித்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணியிலுள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதன்போது, திடீர் சுகவீனமடைந்த அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடைகள் அடங்கிய பையொன்றை மாமியாரின் வீட்டிற்கு உறவினர் ஒருவர் மூலமாக அனுப்பியுள்ளார்.
குழந்தையின் தாய் அனுப்பிய பையை அலுமாரியில் வைத்த மாமியார், மறுநாள் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை சோதனையிட்டுள்ளார்.
இதன்போது, பையில் சிசுவின் சடலம் இருப்பதை அறிந்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை சீனன்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
06 Jul, 2022 | 02:30 PM
16 Jun, 2022 | 07:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS