பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தினால் துவிச்சக்கரவண்டி பேரணி முன்னெடுப்பு

by Bella Dalima 07-07-2022 | 8:45 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தினர் நுகேகொடையில் இருந்து கொழும்பு பொது நூலகம் வரை இன்று துவிச்சக்கரவண்டி பேரணியொன்றை முன்னெடுத்தனர். 9 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. பேரணி முன்னடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எரிபொருள் வரிசையில் இருந்தவர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். பிரதமரின் அலுவலகம் அருகிலும் சென்று அவர்கள் எதிர்ப்பை வௌிப்படுத்தினர். பின்னர் கொழும்பு பொது நூலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது.