கடவுச்சீட்டு வரிசையில் குழந்தை பிரசவித்த பெண்

கடவுச்சீட்டு வரிசையில் குழந்தை பிரசவித்த பெண்

by Staff Writer 07-07-2022 | 2:15 PM
Colombo (News 1st) பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணை இராணுவத்தினர் உடனடியாக காசல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்துள்ள மக்கள் இன்றும்(07) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.