எரிபொருள் வரிசையில் காத்திருந்த வயோதிபர் பலி

எரிபொருள் வரிசையில் காத்திருந்த வயோதிபர் பலி

by Staff Writer 07-07-2022 | 10:19 AM
Colombo (News 1st) எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். பயாகல பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 63 வயதான ஒருவர் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.