நைஜீரிய சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரிய சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

by Staff Writer 07-07-2022 | 11:48 AM
Colombo (News 1st) நைஜீரிய சிறைச்சாலையொன்றிலிருந்து 400இற்கும் அதிக கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைஜீரிய தலைநகர் அபூஜாவிலுள்ள Kuje சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது 4 கைதிகள், பாதுகாப்பு காவலர் ஒருவர் மற்றும் தாக்குதல்தாரிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   2020ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் நைஜீரியாவில் 5000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.