English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jul, 2022 | 9:14 am
Colombo (News 1st) ரயில் சேவைகளை இன்றைய தினம்(07) வழமைக்கு கொண்டுவர முடியும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பலர், பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் நேற்று(06) பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ரயில் ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விரைவான திட்டமொன்றை தயாரிப்பதாக உறுதியளித்ததன் பின்னர் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பஸ் சேவைகள் இன்று(07) வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றும் தனியார் பஸ்களை உரிய முறையில் சேவையில் ஈடுபடுத்த முடியவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
21 Jul, 2022 | 12:38 PM
14 Jul, 2022 | 07:56 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS