விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குமாறு மனு தாக்கல்

விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்

by Bella Dalima 06-07-2022 | 7:09 PM
Colombo (News 1st) இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த பெரும்போகத்தில் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கான நட்ட ஈட்டை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்டோரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.