ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 05-07-2022 | 9:00 AM
Colombo (News 1st) வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியுள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா - காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.