நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2022 | 7:31 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 5 பேர் நேற்றிரவு(04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் படகொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இன்று(05) பொறுப்பேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்