தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது 

47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது 

by Bella Dalima 02-07-2022 | 4:14 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துபாயில் இருந்து தங்கத்தை கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதத் சில்வா தெரிவித்தார். தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.