by Bella Dalima 01-07-2022 | 3:49 PM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கங்கள் சில திடீர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
ஊழியர்கள் பணிக்கு செல்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்காமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையை கட்டியெழுப்புவதற்கான தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவிடம் வினவிய போது, ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக அவர் கூறினார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, ரயில் போக்குவரத்தை வழமைக்கு திருப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.