சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது

புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது

by Bella Dalima 01-07-2022 | 4:10 PM
Colombo (News 1st)  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சைக்கிள்களை திருடிய சந்தேகநபர் ஒருவரை CCTV உதவியுடன் பொலிஸார் கைது செய்தனர். இதனையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 15 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.