இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த பெண்

by Bella Dalima 01-07-2022 | 4:28 PM
Colombo (News 1st) 32 வயதான பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிக்கா ஆற்றில் குதித்துள்ளார். இதன்போது, 5 வயதான சிறுவன் உயிரிழந்தார். குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். சிறுவன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.