அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பேரணி

by Bella Dalima 30-06-2022 | 8:14 PM
Colombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை இன்று பிற்பகல் பேரணியாக சென்றனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இதில் பங்கேற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் ஒல்கொட் மாவத்தை ஊடாக ஜனாதிபதி மாளிகை நோக்கி பயணிக்க முற்பட்டனர். எனினும், கோட்டை செத்தம் வீதியில் வீதித் தடை இடப்பட்டிருந்ததது. அதனையடுத்து, இவர்கள் வீதித் தடைக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.