அமைச்சர்கள் இருவர் கட்டார் பயணம்

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாட அமைச்சர்கள் இருவர் கட்டார் பயணம்

by Bella Dalima 28-06-2022 | 12:51 PM
Colombo (News 1st) சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் கட்டார் பயணித்துள்ளனர். எரிபொருள் கொள்வனவு தொடர்பான கலந்துரையாடல்களை நோக்காகக் கொண்டு இந்த பயணம் அமைந்துள்ளது. அமைச்சர்கள் இருவரும் நேற்று இரவு 8.15 அளவில் கட்டார் நோக்கி சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார். எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.