English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jun, 2022 | 7:24 pm
Colombo (News 1st) அக்குரஸ்ஸ – திப்பட்டுவாவேயில் கப்புறாளை ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் பெற்றோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவரின் 60 வயதான மனைவியும் 40 வயதான மகளும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 70 வயதான முதியவர், கப்புறாளையாக செயற்பட்டு வந்துள்ளதுடன், தனது வீட்டில் ஆலயமொன்றை நிர்வகித்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அருகில் வசித்த 24 வயதான இளைஞர், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையை எடுத்துச்சென்றமை தெரியவந்துள்ளது.
அந்த இளைஞர் தலையை நில்வளா கங்கையில் வீசியிருக்கலாமென சந்தேகிப்பதாகவும் அதனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
16 Jul, 2022 | 05:50 PM
02 Jul, 2022 | 04:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS