வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து

மட்டக்களப்பில் எரிபாருள் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து

by Bella Dalima 27-06-2022 | 3:52 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - ஊரணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் வரிசையில் காத்திருந்த 04 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே இன்று காலை எரிபொருள் வரிசையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். விபத்தின் போது 05 மோட்டார்சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. விபத்தின் பின்னர் பஸ் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். விபத்து தொடர்பில் மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.