மலர்ச்சாலை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

மித்தெனியவில் மலர்ச்சாலை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

by Bella Dalima 26-06-2022 | 3:49 PM
Colombo (News 1st) மாத்தறை - மித்தெனிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவத்தில் 52 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.