ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டு

ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணித்தியால மின்வெட்டு

by Bella Dalima 26-06-2022 | 4:09 PM
Colombo (News 1st) ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. CC வலயங்களில் எதிர்வரும் ஜூலை 2, 3 ஆம் திகதிகளை தவிர, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. MNOXYZ வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது  பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.