எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

by Bella Dalima 26-06-2022 | 7:11 AM
Colombo (News 1st) இன்று (26) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை  அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 470 ரூபாவாகும் ஒரு லிட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 550 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 460 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. சுப்பர் டீசல்75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 520 ரூபாவாகும். இதேவேளை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக தமது எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.