English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Jun, 2022 | 3:27 pm
Colombo (News 1st) ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய விதம் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வௌியிட்டுள்ளது.
கிராமிய பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிக்கல் காணப்படுமாயின், அவர்களை தனிப்பட்ட விடுமுறையிலிருந்து விலக்கி, பொருத்தமான கால அட்டவணையை தயாரிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாத நகர்ப்புற பாடசாலைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கல்வி நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள ஆலோசனைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற பாடசாலைகளின் கனிஷ்ட பிரிவிற்கான பாடசாலை நாட்களை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாடசாலைகள் நடைபெறாத நாட்களில் ஒன்லைன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
போக்குவரத்து சிக்கல் காரணமாக பாடசாலைகளுக்கு வருகை தர முடியாத ஆசிரியர்களுக்கு, குறித்த நாட்களை தனிப்பட்ட விடுமுறை நாட்களாக கருதிற்கொள்ளாது செயற்படுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
20 Jul, 2022 | 10:45 AM
10 Jul, 2022 | 06:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS